18. அருள்மிகு கடைமுடிநாதர் கோயில்
இறைவன் கடைமுடிநாதர்
இறைவி அபிராமியம்மை
தீர்த்தம் கருணா தீர்த்தம்
தல விருட்சம் கிளுவை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கடைமுடி, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கீழையூர்' என்று அழைக்கப்படுகிறது. திருநனிபள்ளிக்கு வடமேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. மாயவரம்-திருநாங்கூர் பாதையில் கீழையூர் வழிகாட்டி பார்த்து இடதுபக்க சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். மாயவரத்திற்கு அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirukadaimudi Gopuramமூலவர் 'கடைமுடிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில், மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'அபிராமியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Thirukadaimudi Amman Thirukadaimudi Moolavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

பிரம்மா, வருணன் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : 94427 79580.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com